இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி இப்பகுதியை சேர்ந்த 6 பேர் ஹோட்டன் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை கடத்தினர். அப்போது, கடத்தல்காரர்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே விமானம் புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக முசாயூசுப், இமின், ஓமர், அலி மூசா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவர்களில் முசாயூசுப் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அலி மூசாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.