கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரமாக பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது.
இதன்பிறகு நடால் சுதாரித்துக் கொண்டு ஆடத்தொடங்கினார். மொத்தம் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்த கடுமையான ஆட்டத்தின் முடிவில் நடால், 7-க்கு 5, 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச்சை வீழ்த்தினார்.
பிரெஞ்சு ஓபனில் 10-வது முறையாக விளையாடும் நடால், அதில் வென்ற 9-வது பட்டம் இதுவாகும். கடந்த ஐந்து போட்டித்தொடர்களில் தொடர்ச்சியாக இந்த பட்டத்தை கைப்பற்றிவருகிறார்.
பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சுவெஹிசை மற்றும் சூய்பெங் ஆகிய சீன வீராங்கணைகள், இத்தாலியின் சாரா எர்ரானி, ரோபர்ட்டா ஜோடியை, 6க்கு4 மற்றும் 6க்கு 1 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி பட்டம் வென்றனர்.