இது குறித்து மாசின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நோர் யூசப் கூறுகையில், “ஒரு புதிய பயணத்திற்கான ஆரம்பம் இங்கு தொடங்கி உள்ளது. மாப் நிறுவனத்தை, நாட்டின் தேசிய அடையாளமாக மாற்ற முயற்சி செய்வோம். எங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிப்போம் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ்டோப் முல்லர் கூறுகையில், “சிவில் விமான போக்குவரத்தின் பொது இயக்குனர் டத்தோஸ்ரீ அசாருதீன் அப்துல் ரகுமானிற்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். செப்டம்பர் முதல் மாப் நிறுவனம் மீண்டும் தொடங்க இருப்பது எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.