இந்த தாக்குதலுக்காக 12 ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள் இந்தோனேசியாவில் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் ஆண்டன் சார்லியன் கூறுகையில், “காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வெளிநாட்டவர்களின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள் தற்போது ஐஎஸ் இயக்கத்தினரால் குறி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், சுற்றுலாத் தளங்கள் அனைத்தின் மீதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.