சென்னை – திருவண்ணாமலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா பன்னீர் செல்வத்துக்கு நேற்றிரவு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வனரோஜாவின் வரவு அவரது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போதுமானதாக இல்லை.
இன்று முதல் சசிகலாவின் ‘வேறு மாதிரியான’ போராட்டம்
இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை முதல் சசிகலாவின் போராட்டம் எந்த கோணத்தில் இருக்கப் போகிறது என இந்திய ஊடகங்கள் ஆரூடங்களைத் தொடங்கியுள்ளன.
வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அனைத்தும் தங்களின் ஒளிபரப்புகளை தமிழகத்தையும், பன்னீர்-சசிகலா போராட்டத்தையும் மையப்படுத்தியே வெளியிட்டு வருகின்றன.
இதன் தொடர்பில் மேலும் சில அண்மைய நிலவரங்கள்:-
- அதிமுக அமைச்சரான பெஞ்சமின் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணையப் போவதாக, பன்னீர் செல்வத்தின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஓ.பன்னீர் செல்வம், தனது முதல் கையெழுத்திட்டு தனது இல்லத்திலிருந்து தொடக்கியுள்ளார்.
-செல்லியல் தொகுப்பு