Home One Line P2 ஐஎன்எக்ஸ் மீடியா: பணமோசடி வழக்கில் ப.சிதம்பரம் விண்ணப்பித்த முன் ஜாமீன் நிராகரிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா: பணமோசடி வழக்கில் ப.சிதம்பரம் விண்ணப்பித்த முன் ஜாமீன் நிராகரிப்பு!

568
0
SHARE
Ad

புது டில்லி: பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் விண்ணப்பித்திருந்த முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை நிராகரித்தது.

இந்த விவகாரத்தை விசாரிக்கும் அமலாக்கத்துறை கைது செய்வதிலிருந்து சிதம்பரம் பாதுகாப்பு கோரியிருந்தார். இம்முடிவினால், சிதம்பரத்தை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைந்துள்ளது.

சிதம்பரம் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளார். அமலாக்கக்துறை வழக்கு, அதே ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் பணமோசடி கோணத்துடன் தொடர்புடையதாகும்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் சிரம்பத்திற்குக்கு முன் ஜாமீன் மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை சவால் செய்த சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு, இது முன் ஜாமீன் வழங்குவதற்கான பொருத்தமான வழக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சிதம்பரத்திற்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்குவது விசாரணையை தடை செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணை நிறுவனமான அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்த போதுமான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கிய அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது.