Home One Line P2 நோபல் பரிசு: இயற்பியல் துறையில் மூவர் பரிசுகளை பெற்றனர்!

நோபல் பரிசு: இயற்பியல் துறையில் மூவர் பரிசுகளை பெற்றனர்!

918
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம்: நோபல் வாரம் நேற்று திங்கட்கிழமை ஸ்டாக்ஹோமில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 2019-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களின் பட்டியல் அக்டோபர் 7 முதல் 14 வரை அறிவிக்கப்படும் நிலையில், நேற்று, உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு வென்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை சுவீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். 2019-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசின் ஒரு பகுதி ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு, இயற்பியல் அண்டவியல் பற்றிய தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல்,  மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோருக்கு சூரிய வகை நட்சத்திரத்தை சுற்றும் எக்ஸோபிளேனட் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாளை புதன்கிழமை வேதியியல் பிரிவுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

அக்டோபர் 10-ஆம் தேதிஸ்வீடிஷ் அகாடமி இலக்கியப் பிரிவில் வெற்றியாளரை அறிவிக்க உள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை அக்டோபர் 11-ஆம் தேதி நோர்வே நோபல் குழு அறிவிக்கும்.

அக்டோபர் 14-ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் பொருளாதார அறிவியல் பிரிவு வெற்றியாளரின் அறிவிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா(தோராயமாக 940,000 அமெரிக்க டாலர்ஆகும்.