Home One Line P2 பாரம்பரிய உடையில் நோபல் பரிசினைப் பெற்ற அபிஜித், எஸ்தர்!

பாரம்பரிய உடையில் நோபல் பரிசினைப் பெற்ற அபிஜித், எஸ்தர்!

924
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம்: கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில்,வங்காள பாரம்பரிய உடையணிந்து அபிஜித் விநாயக் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்தியாவைப் பிரதிநிதித்து அபிஜித் பானர்ஜிக்கு முன் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோர் நோபல் பரிசினை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியஅமெரிக்க பொருளாதார நிபுணரான அவரது மனைவி எஸ்தர் டப்லோ சேலையில் நேர்த்தியாக இருந்ததும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த விழாவில் பானர்ஜியின் சக நோபல் பரிசு வெற்றியாளர் மைக்கேல் கிரெமரும் கலந்து கொண்டார். உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறை என்ற தலைப்பில் விரிவான ஆராய்ச்சிக்காக அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டுப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த 1913-இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ரவீந்திரநாத் தாகூர் பெற்றார். ஆயினும், அவரால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. 1998-இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை அமர்த்தியா சென் வென்றார். இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தைச் சேர்ந்த மற்றொரு வங்காளியான முகமட் யூனுஸ் 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.