Home One Line P1 ஜாவி பாடம்: “பிரதமர் எதிர்மறை குரல்களுக்கு செவி சாய்க்கிறார், அரசியல்வாதிகள் எங்கள் குரலைக் கேட்க வேண்டும்!”-...

ஜாவி பாடம்: “பிரதமர் எதிர்மறை குரல்களுக்கு செவி சாய்க்கிறார், அரசியல்வாதிகள் எங்கள் குரலைக் கேட்க வேண்டும்!”- சித்தி காசிம்

832
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களின் குரலைக் கேட்க அரசியல்வாதிகள் வெளியே வர வேண்டும் என்று ஆர்வலர் சித்தி காசிம் வலியுறுத்தியுள்ளார்.

சீனக் கல்வியாளர் குழு (டோங் ஜியாவோ சோங்) சீன காங்கிரஸை ஏற்பாடு செய்வது குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்ததை அடுத்து இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

நாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது. எதற்கும் பயப்படக்கூடாது. நம் பிரதமர் எதிர்மறை குரல்களுக்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகள் எதையும் சொல்ல முடியும், ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்து இந்த நாட்டை மாற்ற முடியாது.”

#TamilSchoolmychoice

அரசியல்வாதிகள் நாங்கள் பார்ப்பதைப் பார்க்க முடியாவிட்டால், எங்கள் நிகழ்வுக்கு வாருங்கள். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். சில நேரங்களில் அவர்கள் களத்தில் இறங்க வேண்டும்என்று கோலாலம்பூரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

கூட்டு நடவடிக்கை காட் அதிரடி குழுவை (செகாட்) ஆதரிக்கும் ஆர்வலர்கள் மத்தியில் சித்தி இன்று சின மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஜாவி கல்வியை அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்ப்பதற்காக தனி மாநாட்டை அறிவித்தார்.

டோங் ஜியாவோ சோங்கின் காங்கிரஸ் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதியன்று  காஜாங்கில் திட்டமிடப்பட்டுள்ளது.