Home One Line P1 பி40 பிரிவினருக்கு உதவும் வகையில் அமானா இக்திஹார் மலேசியா 2.7 பில்லியன் ஒதுக்கீடு!

பி40 பிரிவினருக்கு உதவும் வகையில் அமானா இக்திஹார் மலேசியா 2.7 பில்லியன் ஒதுக்கீடு!

476
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமானா இக்திஹார் மலேசியா (ஏஐஎம்) இந்த ஆண்டு 2.7 பில்லியன் ரிங்கிட்டை மைக்ரோ நிதியுதவியாக ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் 380,000 பேர் பயனடைவார்கள் என்று ஏஐஎம் நிர்வாக இயக்குனர் முகமட் ஷாமிர் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு, பதிவுசெய்யப்பட்ட 56,000- க்கும் மேற்பட்டவர்கள் வறுமையிலிருந்து வெளியேற உதவுகிறோம்.”

#TamilSchoolmychoice

“இவர்களில், 95 விழுக்காடு பேர் வசதி குறைந்தோரும், ஐந்து விடுக்காட்டினர் வறுமையில் இருக்கும், அதாவது மாதம் 600 ரிங்கிட்டுக்கும் குறைவாகவும் சம்பாதிப்பவர்கள் ” என்று நேற்று திங்கட்கிழமை பெர்னாமா வானொலி நிகழ்ச்சியில் அவர் கூறினார்.