Home One Line P1 தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான்!- நஜிப்

தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான்!- நஜிப்

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு அதன் வரம்புகளைக் கொண்டுள்ளது என்று தேசிய முன்னணி ஆலோசனைக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதமருமான நஜிப் ரசாக் கூறினார்.

“இன்று தேசிய கூட்டணி அரசாங்கம் முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய முன்னணி அரசாங்கமோ அல்ல என்பது பலருக்கு புரியவில்லை.”

“எனவேதான், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவு குறைவாக உள்ளது” என்று நேற்றிரவு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதனால்தான் தனது கட்சியின் மூன்று உயர் தலைவர்கள் பிரதமர் மொகிதின் யாசினின் அமைச்சரவையில் இல்லை என்று அவர் கூறினார்.

“அதனால்தான் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அம்னோ இளைஞர் தலைவர் இன்று அரசாங்க அமைச்சரவையில் இல்லை.”

“நாங்கள் அடுத்த பொதுத் தேர்தல் வரை மட்டுமே தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்போம்,” என்று அவர் கூறினார்.