ஒரு நாளில் மட்டும் 95 பேர்கள் கொவிட்-19 தொற்றிலிருந்து முற்றாகக் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,197 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 46 பேர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்தத் தகவல்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் இன்று வெளியிட்டார்.
எனினும் இன்று மட்டும் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கைய நாடளாவிய நிலையில் 89 ஆக உயர்ந்திருக்கிறது.