Home 13வது பொதுத் தேர்தல் முக்ரிஸ் மகாதீர் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற தொகுதியில் போட்டி!

முக்ரிஸ் மகாதீர் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற தொகுதியில் போட்டி!

511
0
SHARE
Ad

mukrizகெடா, ஏப்ரல் 16-  எதிர்வரும்  பொதுத் தேர்தலில், கெடா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என  தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

கெடா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் என்பவர் நமது நாட்டின் நான்காவது பிரதமரான  மகாதீரின் புதல்வர் ஆவர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் கட்சியைச் சார்ந்த இட்ரிஸ் அகமத்துக்கு எதிராக போட்டியிட்ட  முக்ரிஸ் மகாதீர், 2,205 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

#TamilSchoolmychoice

ஆயர் ஈத்தாம் சட்டமன்ற தொகுதி, ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.