Home One Line P1 கொவிட்-19: 5 பேர் மரணம், 1,348 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 5 பேர் மரணம், 1,348 சம்பவங்கள் பதிவு

717
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை வரையில், 24 மணி நேரத்தில் 1,348 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக 2,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் 1,332 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 16 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 98,737 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 710 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 80,004-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 18,279 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஐவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 444-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 535 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 226 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 189 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. மலாக்கா மற்றும் ஜோகூரில் முறையே 124 மற்றும் 118 தொற்றுகள் பதிவாகி உள்ளன.