Home One Line P1 ‘மாபெரும் கூட்டணி’ தொடர்பாக நம்பிக்கை கூட்டணி ஜனவரியில் சந்திக்கும்

‘மாபெரும் கூட்டணி’ தொடர்பாக நம்பிக்கை கூட்டணி ஜனவரியில் சந்திக்கும்

335
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஜனவரி மாதம் ஒரு மாபெரும் கூட்டணி கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்க நம்பிக்கை கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று லிம் குவான் எங் கூறினார்.

ஜனவரியில் ஒரு சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக ஜசெக பொதுச் செயலாளர் கூறினார். ஆனால், மேர்கொண்ட விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

“ஒரு பெரிய கூட்டணியின் யோசனையை டிசம்பர் 26 அன்று அமானா தலைவர் முகமட் சாபு முன்மொழிந்தார். அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்,” என்று லிம் கூறினார்.

#TamilSchoolmychoice

இது டிசம்பர் 17-ஆம் தேதி ஒரு கூட்டு அறிக்கையில் கூறப்பட்ட அரசியல் மீட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்று லிம் கூறினார். கூட்டணியின் தலைமையில் மாற்றம் இருக்கும் என்று நினைத்த சிலர் இந்த அறிக்கையை தவறாகப் புரிந்து கொண்டனர்.

“கூட்டணியில் சேர ஊழல்வாதிகளைப் பெறுவதை விட மக்களை மையமாகக் கொண்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது,” என்று அவர் மேலும் கூறினார்.