அவர்களுக்கிடையிலான மோதல் இன்று வெள்ளிக்கிழமை (மே 28) பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தியாவின் சில மாநிலங்களைத் தாக்கிய யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை மதிப்பிடுவதற்காக மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மெதினிபுர் மாவட்டத்திலுள்ள களைகுண்டா பகுதிக்கு மோடி வருகை தந்தார். அப்போது அங்கு அவரை மம்தா பானர்ஜி சந்திக்க ஏற்பாடாகியிருந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வராமல் மம்தா சொந்த அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நடத்துகிறார் என அவர் மீதான கண்டனக் கணைகள் இதனால் பாய்ந்துள்ளன.