Home நாடு சிகாமாட் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

588
0
SHARE
Ad

சிகாமாட் : சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான எட்மண்ட் சந்தாரா குமார் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியை 2018-இல் அவர் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தைத் தோற்கடித்தார்.

2020-இல் அவர் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘ஷெராட்டன் நகர்வு’ திட்டத்தின் கீழ் அஸ்மின் அலியுடன் பிகேஆரில் இருந்து வெளியேறினார். பின்னர் பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அண்மையில் பிபிஎம் என்னும் பார்ட்டி பங்சா பெர்சாத்து கட்சியில் இணைந்தார். அஸ்மின் அலியோ இன்னும் பெர்சாத்து கட்சியில் தொடர்கிறார்.