Home அரசியல் சுல்கிப்ளிக்கு தொகுதி தந்தது தவறு – லிம் குவான் எங்

சுல்கிப்ளிக்கு தொகுதி தந்தது தவறு – லிம் குவான் எங்

379
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2கிள்ளான், ஏப்ரல் 25- இந்து கடவுள்களையும், மலேசிய இந்தியர்களையும் இழிவுபடுத்தி விமர்சனம் செய்த சுல்கிப்ளிக்கு தே.மு. நாடாளுமன்ற தொகுதி வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்று ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஒரு சமயத்தை இழிவுப்படுத்தி பேசிய சுல்கிப்ளி மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை அரவணைத்து தொகுதி வழங்கியிருப்பது இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் சந்தியாகோ, கோத்தா அலாம் ஷா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கணபதிராவ், போர்ட் கிள்ளானில் போட்டியிடும் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் ஆகியோரை ஆதரித்து லிம் இன்று உரை நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

பண்டமாரான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.