Home நாடு அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 81-வது பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு

அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 81-வது பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவு

304
0
SHARE
Ad


* டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை
* சிங்கப்பூர் அருண் மகிழ்நன் சிறப்புரை
*இரா.முத்தரசன் வரவேற்புரை

கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத்  தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் நினைவுச் சொற்பொழிவு கீழ்க்காணும் தேதியில் நடைபெறவிருக்கிறது.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025
நேரம்: பிற்பகல் 3.30 மணி முதல் (தேநீர் விருந்துபசரிப்புடன்)
இடம்: நேதாஜி மண்டபம், மஇகா தலைமையகக் கட்டடம்,
எண்: 1, ஜாலான் ரஹ்மாட், ஜாலான் துன் இஸ்மாயில் (வழி), கோலாலம்பூர்

டான்ஶ்ரீ சுப்ராவின் மலாயாப் பல்கலைக் கழகத் தோழரான சிங்கப்பூரைச் சேர்ந்த திரு அருண் மகிழ்நன், “டான்ஶ்ரீ சுப்ரா: பல்கலைக் கழக இனிய நினைவுகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவை வழங்குவார். அருண் மகிழ்நன்,
சிங்கப்பூர் மின்மரபுடமைத் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதுடன் சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் செயலாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

இந்த நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமை தாங்குவார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இரா.முத்தரசன், வரவேற்புரை நிகழ்த்துவார். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண்: +6012-2326967

இந்நிகழ்ச்சி யூடியூப், முகநூல் இணைப்புகளின் வழி நேரலையாகவும் ஒளிபரப்பாகும்.

https://youtube.com/live/QfFAz8er0mo

http://facebook.com/selliyal

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆசியான் மாநாடு காரணமாக சாலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு போக்குவரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.