கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் கொழும்பில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கிழக்கு மாகாணசபை மற்றும் பிரதேச சபைகளின் கட்சிப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஆளும் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட வேண்டுமென சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments