Home கலை உலகம் 32 ஆண்டுக்கு பிறகு மோகன்லால் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி- பூர்ணிமா பாக்யராஜ்

32 ஆண்டுக்கு பிறகு மோகன்லால் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி- பூர்ணிமா பாக்யராஜ்

628
0
SHARE
Ad

poornimaசென்னை, மே 16- விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் பூர்ணிமா பாக்யராஜூம் ஜோடியாக நடிக்கிறார்கள்.

பூர்ணிமா பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

1980-ல் ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்’ என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய ஹிட்டானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜில்லா’ படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை நேசன் இயக்குகிறார்.

#TamilSchoolmychoice

பூர்ணிமாவுடன் நடிப்பதற்கு மோகன்லால் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இருவரும் நடிப்பதன் மூலம் இப்படம் மலையாள ரசிகர்களை கவரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மோகன்லாலுடன் நடிப்பது குறித்து பூர்ணிமா கூறியதாவது:-

மோகன்லாலும் நானும் ஜோடியாக நடித்த ‘மஞ்சள் விரிஞ்ச பூக்கள்’ மலையாள படம் வெற்றிகரமாக ஓடி சாதனை நிகழ்த்தியது.

அதன் பிறகு இருவரும் நிறைய படங்களில் நடித்தோம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை. அதன் பிறகு எனக்கு திருமணம் மற்றும் குழந்தைகள் என்று ஆன பிறகு சினிமாவில் நீண்ட இடைவெளி ஏற்பட்டது. ஆனாலும் சென்னையில் மோகன்லால் படங்களை தொடர்ந்து பார்த்து வந்தேன்.

விஜய், மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்று இப்படத்தின் வாய்ப்பு வந்ததும் உடனே ஒப்புக்கொண்டேன்.

32 ஆண்டுக்கு பிறகு நானும் மோகன்லாலும் காதல் ஜோடியாக இல்லாமல் கணவன் மனைவியாக இப்படத்தில் நடிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.