இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- “சல்மான் ருஷ்டி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும், அவர் கொல்கத்தாவிற்குள் நுழைவதை முதல் மந்திரி போலீசை வைத்து தடுத்துவிட்டார் என்பது உண்மையானால், அவர் சரியான காரியத்தை செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
சல்மான் ருஷ்டியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை. சல்மான் ருஷ்டியை கொல்கத்தாவிற்குள் நுழைய அனுமதித்திருந்தால், மத ஒருமைப்பாட்டை அவர் சீர்குலைத்திருப்பார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முகம்மது நபியை தரக்குறைவாக பேசும் உரிமை யாருக்கும் கிடையாது. சல்மான் ருஷ்டி ஒரு படைப்பாளி அல்ல. அவர் ஒரு சாத்தான்.