Home உலகம் இந்திய பெண்ணுக்கு உயர் பதவி வழங்கி கெளரவித்த ஒபாமா

இந்திய பெண்ணுக்கு உயர் பதவி வழங்கி கெளரவித்த ஒபாமா

377
0
SHARE
Ad

india

வாஷிங்டன், ஜன 20- இந்திய – அமெரிக்க தொழில்முனைவரான ஷமினா சிங், தேசிய சமூக சேவை கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு மற்றும் தனியார் அரசு பணிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில், திறமையானவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உயர் பதவிகளை வழங்கி கெளரவித்து வருகிறார். இது தொடர்பாக, அதிபர் ஒபாமா கூறுகையில், “திறமையான தனிநபர்களை நான் கெளரவப்படுத்த விரும்புகிறேன். இவர்கள் அரசின் நிர்வாக பணிகளில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும்” என்று கூறினார்.