Home உலகம் பிரான்சில் வெள்ளம் !

பிரான்சில் வெள்ளம் !

486
0
SHARE
Ad

france_floods_002

பாரிஸ், ஜன 20- பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதுவரையிலும் 2 பேர் பலியாகி உள்ளனர், 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து உள்ளூர் அதிகாரி,  “தனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது 73 வயது மதிக்கத்தக்க பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார் என்றும், தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.