இன்று அதிகாலை 5.00 மணி தொடங்கி காலை 9 மணி வரை கடும் மழை பெய்தது. எனினும் இதுவரையில் வெள்ள நிவாரண மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.
பாயா தெருபோங், ரெலாவ், புக்கிட் ஜாம்புல், புலாவ் திக்குஸ், பாயான் பாரு, பாலிக் புலாவ் ஆகிய வட்டாரங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
பெர்மாத்தாங் ராவா, பெர்டா, பாயான் லெப்பாஸ் நிபோங் திபால் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டன.
சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் கார்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. விபத்துகளும் ஏற்பட்டன.
Comments