தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் பேசியபோது, “கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்ச்சியை தமிழகம் மறக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலிதா பிரதமராகப் போவது உறுதி. இதனால் 2014 ஆம் ஆண்டும் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும்” என்று ராமராஜன் கூறினார்.
Comments