Home நாடு சமூக ஆர்வலர் ஐரின் பெர்னாண்டஸ் காலமானார்!

சமூக ஆர்வலர் ஐரின் பெர்னாண்டஸ் காலமானார்!

509
0
SHARE
Ad

IRENE FERNANDEZ (MUGSHOT)

கோலாலம்பூர், மார்ச் 31 – மூத்த சமூக ஆர்வலரான ஐரின் பெர்னாண்டஸ் இருதயக் கோளாறு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 67.

தெனாகானிதா என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனரான ஐரின், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த செவ்வாய் கிழமை முதல் செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.58 மணியளவில் அவர் காலமானார்.

அவரது நல்லுடல் இன்று சிரம்பானில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.