சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் அனைவரும், அவர்களின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் படி நாடெங்கிலும், “சிவப்பு அடையாள அட்டை நடவடிக்கை” -ன் கீழ் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ என்.சிவ சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் இருந்து, தேசிய பதிவிலாகாவின் உதவியோடு இந்த நடவடிக்கை துவங்கப்படும் என்றும் சிவ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 21 -ம் தேதி கூலிம், கெடா ஆகிய மாநிலங்களிலும், ஜூன் 29 -ம் தேதி பேராக், புருவாஸிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவ சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.