Home வாழ் நலம் தூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்

தூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்

12219
0
SHARE
Ad

sleepingகோலாலம்பூர், பிப்.22- வேலை பார்க்கும் அனைவருக்கும் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் தூக்கமின்மை.

சிலருக்கு வேலைப் பளு, ஆரோக்கியமில்லாத வாழ்க்கையினால் தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

அதனால் சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுவார்கள். இந்த தூக்க மாத்திரை சாப்பிடுவதால் உடம்புக்குத் தான் கேடு வரும்.

#TamilSchoolmychoice

தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடி சாப்பிட்டால் நாம் அதற்கு  அடிமை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு இயல்பாகவே தூக்கம் வந்தால்  கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.

தூக்க மாத்திரை சாப்பிட்டால் நாம் சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சனை இருக்கிற நபர்கள் தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.

சிலர் தூக்க மாத்திரையை  குளிர் பானம் அல்லது  மது பானங்களில்  கலந்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும்  மது பானக்களில் கலந்து சாப்பிட்டால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். முக்கியமாக தூக்க மாத்திரையை திராட்சை பழ  சாறுடன் சாப்பிட வேண்டாம்.

தூக்க மாத்திரை சாப்பிட்டால் அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன்றவை ஏற்படும்.

தூக்கம் அதிகம் வருவதால், பசியைக் கூட மறந்து விடுவோம். இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து, தலைச் சுற்றல், உடலில் நடுக்கம் போன்றவை ஏற்படும்.  ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீர்கள்..!