குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
தேன் கூட்டைக் கட்டுவதற்கு தேனீக்கள் ஒரு விதமான பிசினைப் பயன்படுத்துகின்றன. இதைத் தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள்.
வேலைக்காரத் தேனீக்களின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இருந்து வரும் ஒரு விதத் திரவம் ‘லார்வா’ தேனீக்களுக்கு உணவாகும்.
இதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் எலிக்கு தேனும் புகுட்டப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதன்பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன்மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க் கட்டி வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப் பட்டிருப்பது உறுதியானது. மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது.
இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை. மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி, தேன் பொருட்கள் புற்று நோய்க் கிருமிகளை அழிப்பது உறுதியானால், உலகில் தேனுக்கு கிராக்கி ஏற்படும் என்பதில் ஐயமில்லை!