Home அவசியம் படிக்க வேண்டியவை மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன்!

மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன்!

708
0
SHARE
Ad

271861-kamal-haasan-at-ficci-frames-2013.jpgசென்னை, அக்டோபர் 3 – மோடியின் சுத்தமான இந்தியாவை உருவாக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டனர் நடிகை பிரியங்கா சோப்ராவும், கமல்ஹாசனும். சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் பணியாற்ற, 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் மோடி. மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோர் தான் இந்த 9 பேர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை உலக நாயகன் கமலஹாசனும், இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

sachinஇது குறித்து கமலஹாசன் கூறியதாவது, “பிரதமரின் இந்த தேர்வு குறித்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்துள்ளேன். மதிப்பிற்குரிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்”.

“கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான். இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையைய் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்”.

“எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய ஒரு கடமையாக நான் நினைக்காமல் செய்த கடமைக்கான ஒரு பாராட்டாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதை மாண்புமிகு பிரதமருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்றிய ஒரு சிறிய ஊக்கியாக நான் இருந்திருக்கிறேன். அந்த பணி தொடரும்”.

“பிரதமர் தேர்ந்தெடுத்த இந்த ஒன்பது பேர் இன்னும் ஒன்பது பேரை தேர்ந்தெடுக்க அவர் பணித்திருக்கிறார், பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் தொன்னூறு லட்சம் பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன்”.

“ஒரு பில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்ச்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் பரவும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

priyanka-chopraஇது குறித்து பிரியங்கா சோப்ரா தனது டூவிட்டர் இணையதளத்தில், “நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.