Home இந்தியா பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் – மோடி

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் – மோடி

495
0
SHARE
Ad

pranab-modi-09புதுடெல்லி, டிசம்பர் 12 – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று தமது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

#TamilSchoolmychoice

modi-pranab“நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடனும் மன உறுதியோடும் நீண்ட காலம் வாழ வேண்டும். பிரணாப் முகர்ஜி தம் வாழ்க்கையை இந்தியாவிற்காக அர்ப்பணித்தவர்”.

“பிரணாப் முகர்ஜியின் அரசியல் அனுபவத்தோடும் அவரது தகுதியோடும் ஒரு சிலரை மட்டுமே ஒப்பிட முடியும். நமது நாட்டின் ஜனாதிபதியாக பிரணாப் கிடைத்தது நாம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கவுரவம்” என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.