Home One Line P1 “பணி ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த அவசியமில்லை!”- குலசேகரன்

“பணி ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த அவசியமில்லை!”- குலசேகரன்

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பணி ஓய்வு வயதை 65 வயதாக உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் கூறுகையில், ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தால் சுத்திகரிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டிய பல்வேறு விவகரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மலேசியாவில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 10.9 விழுக்காடாக இருப்பதாகவும், இந்த மாற்றம் குறிப்பாக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கூடுதலாக, இந்த வயது பொதுவாக ஒரு பணியாளரின் உடல்நலம் மற்றும் உடல் வலு காரணிகளுடன் தொடர்புடையது என்பதால் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படலாம்.”  என்று அவர் இன்று புதன்கிழமை மக்களவையில் கூறினார்.

ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டம் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (எம்டியூசி) முன்மொழிவு என்று குலசேகரன் கூறினார்.

“2013-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது சட்டம் 2012-இன் படி, மலேசியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் துறை முதலாளிகளும் ஒரு பணியாளரின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது 60 என்று குறிப்பிட்டுள்ளது.”

இதன் பொருள் என்னவென்றால், ஓர் ஊழியர் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்ற முடியும், மேலும் இது முதலாளியின் வேலை வாய்ப்பையும் பொறுத்ததுஎன்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தற்போதுள்ள ஓய்வு பெறும்  வயது வரம்பை 65 வயதாக நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.