கடந்த நவம்பர் 25-ம் தேதி கெவின் மொராயிஸ் கொலை தொடர்பில் சார்லஸ் அளித்த சத்தியப் பிரமாணத்தில், அரசாங்கத்திலுள்ள முக்கியப் புள்ளிகளின் இரகசிய விவகாரங்கள் அடங்கிய பென் டிரைவ் ஒன்றை தனது சகோதரர் தன்னிடம் அளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அந்தச் சத்தியப் பிரமாணம் தொடர்பில் அமெரிக் சித்துவிடம் காவல்துறை இன்று விசாரணை நடத்தியது.
அதில், கெவின் மொராயிஸ் மாயமான செப்டம்பர் மாதமே சார்லஸ் தன்னை அனுகியதாகவும், எனினும், இப்படி ஒரு சத்தியப் பிரமாணத்தை அளிக்கப் போகிறார் என்பது தனக்கு நவம்பர் 24-ம் தேதி அன்று தான் தெரியும் என்றும் அமெரிக் சித்து தெரிவித்துள்ளார்.