பாக்தாத் நகரின் தெற்கே சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலியானவர்களில் 28 பேர் உள்ளூர் போலீசார் என்றும் மீதிபேர் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக அமாக் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.