ஜே.கே.ரித்திஷ் தலைமையிலான ஒரு குழுவினர் அந்த அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு பூட்டியதைத் தொடர்ந்து அதைத் திறக்க இன்று காலை விஷால் குழுவினர் முயற்சி காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர். தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தினால் விஷால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விஷால் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே அலுவலகத்தின் பூட்டு பதிவாளர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நீண்ட நேரம் நடைபெற்ற வாக்குவாதங்களைத் தொடர்ந்து இறுதியில் அரசாங்கக் காவல் துறையினரின் கடமைக்கு இடையூறு செய்ததாக விஷாலும் அவரது குழுவினரும் கைது செய்யப்பட்டு, ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.
-செல்லியல் தொகுப்பு