இதனிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ள நிலையில், இன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை டில்லி நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் அடுத்த உத்தரவு வரும் வரையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முறைப்படி குற்றவாளிகள் நான்கு பேரும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.