இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்புகளின் எண்ணிக்கை 8,616-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 10 பாதிப்புகளில், 4 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். உள்ளூரிலேயே 6 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,308-ஆக உயர்ந்தது.
இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆகக் குறைந்திருக்கிறது.
அவர்களில் 2 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுவாசக் கருவிகளின் உதவியோடு யாருக்குமே சிகிச்சை வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான நான்கு சம்பவங்களில் மூவர் பணி நிமித்தம் நாடு திரும்பிய நிரந்தர வசிப்பிடத் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
உள்ளூரில் தொற்று கண்ட 6 சம்பவங்களில் 2 சம்பவங்கள் அந்நியர்கள் சம்பந்தப்பட்டதாகும்.
இன்றும் மரணங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து கொவிட்-19 தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 121 ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.