அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆலயம் பிரமாண்டமான அளவில் கட்டி முடிக்கப்பட்டு உலகப் புகழ் பெற்ற இந்து தலங்களில் ஒன்றாகத் திகழும் என கணிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்த ஆலய நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் விழாவில் இந்திய பிரதமர் கலந்து கொண்டார்.
2024-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த பொதுத்தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களில் அயோத்தியா இராமர் ஆலயம் ஒரு முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

