Home One Line P1 ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ராயல் சிலாங்கூர் கோல்ப் கிளப் உறுப்பினர் ஒருவர், நேற்று கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கடைசியாக அதன் பாதிக்கப்பட்ட உறுப்பினர் கோல்ப் கிளப்பில் இருந்தது எப்போது என்பதை வெளிப்படுத்த கிளப் மறுத்துவிட்டது.

“நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஊழியர்கள் சோதனைக்காக (சுகாதார அமைச்சின்) அனுப்பப்பட்டுள்ளனர். மற்ற அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கிளப்பின் நிர்வாகம் கூறினார்.

#TamilSchoolmychoice

கிளப் நேற்று தனது உறுப்பினர்களில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.