உள்ளூரில் 3,583 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 2 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 190,434 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.
இன்னும், 40,574 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 280 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 111 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 11 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 700-ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 1,295 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகியுள்ளன. அடுத்த நிலையில் கோலாலம்பூர் 610 தொற்றுகளைப் பதிவு செய்தது.
ஜோகூர் 516 சம்பவங்களைப் பதிவு செய்த நிலையில், சபா 303 சம்பவங்களும், சரவாக்கில் 205 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.