Home நாடு ஊடகத் துறை மேம்பாட்டுக்கு, பிரதமர் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

ஊடகத் துறை மேம்பாட்டுக்கு, பிரதமர் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

77
0
SHARE
Ad
ஊடகவியலாளர் நாள் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்த அன்வார் – தொடர்புத் துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில், பெர்னாமா தலைவர் டத்தோ வோங் சூன் வாய்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜூன் 14) புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ‘ஹாவானா’ என்னும் ‘தேசிய ஊடகவியலாளர் நாள்’ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய ஊடகவியலாளர்களுக்காக 30 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

பின்னர் தொடர்புத் துறை அமைச்சு, இந்த நிதி ஊடகவியலாளர்களுக்கு எவ்வாறு பயன்தரும் வகையில் பயன்படுத்தப்படும் என்பது குறித்து விரிவான விவரங்களை வெளியிடும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

பிரதமர் தன் உரையில் ஊழலை ஒழிப்பதில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் தொடர்ந்து தீவிரமாகப் பாடுபடப் போவதாக தெரிவித்தார். தான் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டுவதில்லை எனக் குற்றம் சாட்டுபவர்களைச் சாடிய அன்வார், நாட்டின் நிதி வளங்களைக் கோடிக்கணக்கில் சூறையாடிய பலரை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிப்பதற்கும், பல பிரமுகர்களின் ஊழல் விவகாரங்களை வெளிக் கொண்டுவருவதற்கும் தான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பல ஊடகவியலாளர்கள் பாராட்டுவதில்லை என வருத்தம் தெரிவித்தார்.