அதன்படி, கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.42 மணிக்கு அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் கிளம்பிய 9–வது நிமிடத்தில், அதன் 3–வது பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ராக்கெட் நடுவானில் சுமார் 150 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.
இதில் செயற்கைக்கோள் பாகங்கள் பசிபிக் பெருங்கடல் அல்லது சைபீரியா பகுதியில் விழுந்திருக்கலாம் என ரஷ்யத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளளின் மதிப்பு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகின்றது. எனினும் ராக்கெட்டின் பாகங்கள் விழுந்தது பற்றியோ, உயிர்ச்சேதம் பொருள் சேதம் பற்றியோ எந்தத் தகவல்களும் வெளியிடப் பட வில்லை.