தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை பற்றி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருக்கும் சர்ச்சைக்குரிய படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இந்த கட்டுரையின் தலைப்பில் ஜெயலலிதா குறித்து இடம்பெற்ற வாசகம் கடும் கண்டனங்கள் எழுந்தன.