இந்த நிபந்தனையைத் தளர்த்தக் கோரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவிற்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி முன்பு முன் பிணை நிபந்தனையைத் தளர்த்த மறுத்துவிட்டது.
இந்நிலையில், மீண்டும் அவரது கோரிக்கையை மறு பரிசீலனை செய்த நீதிமன்றம் இன்று அவரது முன் பிணை நிபந்தனையைத் தளர்த்த முன்வந்தது.
இனி அவர் தினந்தோறும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தேவையில்லை என்று நிபந்தனையை நீக்கியது.
ஆனால், இளங்கோவன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால், இந்தச் சலுகை நீக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.