இந்தப் பயங்கரவாத்தில் தொடர்புடைய 12 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிப்பது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
12 குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். அவர்களுக்கான தண்டனை விவரம் சென்ற வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,பல்வேறு காரணங்களால் இறுதித் தீர்ப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில்,அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வழங்கப்படும் என்று மும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.