இந்நிலையில், கூட்டணி பேரம் நடத்தி வரும் திமுக, யாரும் எதிர்பார்க்க வண்ணம் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க அனைத்து ரகசிய ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
“‘நிபந்தனை எதுவுமின்றி கூட்டணி பேசத் தயார்” என, திமுக சார்பில் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதனை எதிர்க்கும் விதமாக காங்கிரஸ் தரப்பில் பேசிய இளங்கோவன், “கூட்டணி விஷயத்தில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யாருடன் கூட்டு என்றாலும், சில நிபந்தனைகளோடுதான் சேருவோம். அதில், கூட்டணி ஆட்சி என்பதும் ஒன்று” என்று கூறியுள்ளார்.
திமுகவின் இந்த யோசனையை பாஜவும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. பாஜ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரே நிபந்தனை, ‘2 ஜி’ வழக்கு தொடர்பாக, எந்த உதவியும் செய்ய முடியாது என்பது தான்.
இப்படியாக தேர்தல் சூழல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ள நிலையில், அதிமுக தலைமை என்ன முடிவு செய்துள்ளது என்பது இன்னும் சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது.