இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மகாதீரின் அந்த தவறான தகவல்கள் கொண்ட அறிக்கைகளை ஆராயாமல், ஊடகவியல் ரீதியில் விசாரிக்காமல், சில இணைய ஊடகங்கள், பொறுப்பற்ற முறையில் வெளியிடுவதாக 1எம்டிபி குற்றம்சாட்டியுள்ளது.
எட்ரா குளோபல் எனர்ஜி பெர்ஹாட் நிறுவன விற்பனை தொடர்பில் வலைத்தளம் ஒன்றில் வெளியான பதிவு ஒன்றை சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், அந்தப் பதிவானது 1எம்டிபி விவகாரத்தை எப்படியாவது அரசியலாக்க வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் மகாதீர் மீண்டும் தோல்வியுற்றிருப்பதை புலப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
“மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை 1எம்டிபியில் இருந்து வந்துள்ளதாக அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். ஆனால் 1எம்டிபியிடம் இருந்து எந்தவொரு தொகையும் பிரதமரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று முறை அறிக்கைகள் வழி தெளிவுபடுத்தி உள்ளது” என்றும் 1எம்டிபியின் அறிக்கையில் மேலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.