Home கலை உலகம் மூன்று கிராமங்களை தத்தெடுத்தார் சூர்யா!

மூன்று கிராமங்களை தத்தெடுத்தார் சூர்யா!

458
0
SHARE
Ad

Surya (1)சென்னை – மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக நிவாரணநிதி வழங்கி உதவிக்கரம் நீட்டியது நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் தான். சூர்யா-கார்த்தி இணைந்து 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அளித்த நிலையில், கார்த்தி மற்ற நடிகர்களுடன் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை செய்தார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக தற்போது மூன்று கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை தங்கள் அகரம் அறக்கட்டளை, தத்தெடுத்துள்ளதாக சூர்யா சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

akshaykumar-647x450அதேபோல், இயக்குனர் மணிரத்தினமும் அவரது மனைவி சுகாசினியும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்து பல்வேறு உதவிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இந்தி நடிகர் அக்ஷய்குமார், சுஹாசினி மணிரத்னத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஜெயேந்திரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடி நிதி அளித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், முதல்வர் நிவாரணநிதிக்கு 1 கோடி ரூபாய், நிதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.