கங்கார்- இளைய தலைமுறையினர், குறிப்பாக அதிகம் படித்தவர்கள் மஇகா நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்புகளும் புரிதலும் மேலும் வலுவாகும் என்றார் அவர்.
இளைஞர்களின் ஈடுபாடும் புத்தாக்க சிந்தனைகளும் இருக்கும்போது கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்றார் அவர்.
“இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்திய சமுதாயத்திடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு நன்றாக உள்ளது. கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு இதைக் கணிக்க முடிகிறது. இளையர்கள் பங்கேற்கக் கூடிய நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்வோம்,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.